பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா பல ரசிகர்களின் கனவுகன்னி. எதையும் யாரிடமும் மறைக்கக்கூடாது(தனது உடல் உட்பட) என்பது ஷெர்லின் சோப்ராவின் கொள்கை. ஹாட்டான நடிகை என்ற பெயர் மற்ற நடிகைகளுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஷெர்லின் சோப்ராவிற்கு மிகவும் பொருந்தும்.
அனல் பறக்க வைக்கிறேன் என இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களுக்குள் தான் அனலை பறக்க வைக்கிறது. பிரபல ஆங்கில மாதப்பத்திரிக்கைக்கு நிர்வாண ஃபோஸ் கொடுத்துவிட்டு ’இந்திய நடிகையான நான் இவ்வளவு பகிரங்கமாக செய்த செயலுகாக எனக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்’ என அவரே கேட்டுக்கொண்டார்.
நடிகை வித்யாபாலன் “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படத்தில் நடித்ததை பார்த்து நான் அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட விரும்புகிறேன் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இதெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டாலும், இப்போது ஷெர்லின் சோப்ரா கூறியிருப்பது சரசரவென பற்றிக்கொண்டு எறிகிறது பாலிவுட்டில்.
ஷெர்லின் சோப்ரா தனது ட்விட்டர் அக்கவுண்டில் “நான் பணத்திற்காக பலருடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது எனக்கு பணம் தேவைப்பட்டது.” என கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் துணிகளுக்கு விலக்கு(!) அளிக்கப்பட்ட பார்ட்டியில் கலந்துகொண்ட தனது நிர்வாண படங்களை ட்விட்டரில் போட்டு அனல் கெளப்பிக்கொண்டிருக்கிறார் ஷெர்லின் சோப்ரா.