இந்திய மொபைல் சந்தையில் இன்னும் ஒரு நிலையான இடத்தைப் பெற்றிருக்கும் நோக்கியா விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும் இரண்டு புதிய போன்களை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய போன்களுக்கு ஃபீ மற்றும் ஏரோ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த விண்டோஸ் போன் வரும் செப்டம்பர் 5ல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த இரண்டு போன்களும் நோக்கியாவின் லுமியா-800 மற்றும் 900 ஸ்மார்ட்போன்களைப் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபீ போன் எடி&டியுடன் அமெரிக்காவில் விரைவில் களமிறக்கப்படும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஏரோ போன் எடி&டி மற்றும் டி-மொபைலுடன் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆரோ போன் நடுத்தர வகையைச் சேர்ந்ததாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் எச்டிசி நிறுவனமும் ஒரு புதிய விண்டோஸ்-8 போனைக் களமிறக்க இருக்கிறது.