என் பொண்டாட்டி என்னை பூரி கட்டையால் அடிச்சிட்டாப்பா, என்று ஒருவர் கூறினால், அது பரவாயில்லை நான் தினமும் தோசை கரண்டியால அடி வாங்குறேனே என்று பதில் கூறுவார் மற்றவர். இவ்வாறு பேசிக்கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில் மனைவியின் கையால் அடி வாங்கியதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார் ஜேம்ஸ்பாண்ட் நாயகன் ரோஜர் மூர்.
ஜேம்ஸ்பாண்ட் நாயகர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வரிசையில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர் தனக்கென்று தனி ரசிகர்களை கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு 84 வயதாகிறது. அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிர்க்கு பேட்டியளித்தார் மூர்.
அப்போது சினிமாவில் தான் துப்பறியும் வீரதீர வேடம் ஏற்று நடித்தாலும் நிஜ வாழ்வில் மனைவிகளிடம் அடி- உதை வாங்கி இருக்கிறேன் என்று கூறினார். முதல் மனைவி டூர்ன்வான் ரோஜர் மூரை கையால் குத்து விடுவதுடன் நகத்தால் கீறி விடுவாராம். ஒரு முறை டீ கோப்பையால் தாக்கியதில் காயம் கூட ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.
1946 ல் இந்த மணவாழ்க்கை கசந்த பின்னர் பாடகியான டாரோதி ஸ்குரீஸ் சினை இரண்டாவதாக திருமணம் செய்தார் ரோஜர் மூர். ஆனால் அவரும் ரோஜர் மூர் தன்னிடம் நம்பிக்கைக்குரியவராக இல்லை என கருதி வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார். டாரோதி தனது தலையில் கித்தார் இசைக்கருவியை கொண்டு தாக்கியுள்ளார் என்று அப்பாவியாக கூறியுள்ளார் இந்த முன்னாள் ஜேம்ஸ்பாண்ட்.
கல்யாணம்னு ஆனபிறகு மனைவி கையால அடிவாங்கிறது சாதாரணமப்ப. இதுல ஜேம்ஸ்பாண்ட் மட்டும் விதிவிலக்கா என்ன?.