நள்ளிரவு நேரம். திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட தாய் பக்கத்தில் தன் மகன் இல்லாததைக் கண்டு துணுக்குற்றாள்.
பல இடங்களில் தேடி இறுதியில் குளக்கரையில் கண்டாள்.
""தனியாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்றாள்.
""நிலவொளியில் மீன்கள் துள்ளி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்''
""உனக்குப் பயமாக இல்லையா?''
""பயமென்றால் என்ன அம்மா?'' என்றான் எட்டு வயதே நிரம்பிய அந்தச் சிறுவன்.
அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் சரித்திரத்தில் இடம் பெற்ற மாவீரன் நெப்போலியன்.