காய்கறிக் கடைக்குப் போகிறோம். எல்லாம் வாங்கிய பின்னர் கொஞ்சம்போல கொத்தமல்லி கொசுறாக கேட்போம். கேட்பதுதான் கொஞ்சம், ஆனால் கடைக்காரர் கேட்டதற்கும் மேலாகவே கொடுத்தாலும் கூட, என்னப்பா இவ்ளோதானா, இன்னும் கொஞ்சம் கொடேன் என்று கேட்காதவர்களே கிடையாது. இதற்கு அடிப்படை காரணம்- ஆசை.
எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.
என்னதான் கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு போல ஒன்று கேட்குதாம் என்பார்கள் கிராமங்களில். இது உண்மைதான். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள் என்கிறார் வில்லியம் நிக்கல்சன்.
நிக்கல்சன், இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. குறைந்தது செக்ஸ் விஷயத்தில்.
என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.