காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை சிட்டி போலீசுக்கு போன் வந்தது. இதனையடுத்து போலீசார் பலத்த சோதனை செய்தனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.